Sri Mahavishnu Info: விஷ்ணு புராணம் – பகுதி 31 | Vishnu Purana Ep 31 விஷ்ணு புராணம் – பகுதி 31 | Vishnu Purana Ep 31
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

விஷ்ணு புராணம் – பகுதி 31 | Vishnu Purana Ep 31

Sri Mahavishnu Info
விஷ்ணு புராணம் – பகுதி 31 | Vishnu Purana Ep 31
02_09. இந்த த்ருவ ஸ்தானம் எப்படி எல்லாவற்றிற்கும் ஆதாரமாயிருக்கிறது என்று கூறுகிறார் பராசரர். மேலுலகின் நக்ஷத்ர கூட்டம் உடும்பு போன்ற சிம்சுமாரம் என்ற ப்ராணியின் உருவத்தை ஒத்திருக்கிறது. வலமாகச் சூழ்ந்துள்ள அதன் வால் பாகத்திலேயே த்ருவன் இருக்கிறான். இதற்கே சிம்சுமார சக்ரமென்றும் பெயர். த்ருவன் தானும் சுற்றி, மற்றவர்களையும் தன்னைச் சுற்றும்படி செய்கிறான். சந்த்ர, ஸூர்ய, நக்ஷத்ரங்கள் அவனிடம் காற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. நாராயணன் இந்த ப்ராணியின் ஹ்ருதய ஸ்தானத்தில் இருக்கிறார். நாராயணம் த்ருவனுக்கும், த்ருவன் ஸூர்யனுக்கும், அவன் இந்த உலகிற்கும் ஆதாரம். எட்டு மாதங்கள் நீரை உறிஞ்சி, மீண்டும் அதை சுவையுடன் மழையாகப் பொழிகிறான் ஸூர்யன்.

ஸூர்யன் கிரணங்களால் ஜலத்தை உறிஞ்சி, சந்த்ரனிடம் பொழிகிறான். சந்த்ரன் வாயு நாடிகளால் புகை, நெருப்பு, காற்று இவைகளின் கூட்டமாகிற மேகத்தில் பொழிகிறான். இதற்கு முந்தைய மேகங்களிலிருந்து தண்ணீர் வழிவதில்லை. அவை அப்ரங்கள் எனப்படுகின்றன. ஆறு, ஸமுத்ரம், பூமி, உயிர்கள் என நான்கு இடங்களிலிருந்து க்ரஹிக்கப்படும் நீரை சுவை மிகுந்ததாக்கி மேகங்கள் மீண்டும் பொழிகின்றன. இவ்வாறன்றி ஸூர்யன் இருக்கும் போதே பெய்யும் மழைநீர் ஆகாச கங்கையிடமிருந்து ஸூர்யன் உறுஞ்சியது. அது புண்ய தீர்த்தம். கங்கா ஸ்னானம், திவ்ய ஸ்னானம் இதில் நனைவது. இவர்கள் ஒரு போதும் நரகம் செல்வதில்லையாம்.

அச்வினி, க்ருத்திகை முதலான ஒற்றைப்படை நக்ஷத்ரங்கள் விஷம நக்ஷத்ரங்களாகும். பரணி, ரோஹிணீ முதலிய இரட்டைப்படை நக்ஷத்ரங்கள் ஸம நக்ஷத்ரங்களாகும். விஷம நக்ஷத்ரங்களுடன் ஸூர்யன் இருக்கும் போது பொழியும் மழை நீர் திக்கஜங்களால் கங்கையிலிருந்து உறிஞ்சி விடப்பட்டது. இன்னொன்று ஸூர்யனாலேயே எடுத்து விடப்பட்டது. மழைநீரே உயிர்கள் வாழ ஓஷதிகளை வளர்க்கிறது. எனவே அது அம்ருதம். இவைகளை முறையே மழைநீர், மேகம், ஸூர்யன், த்ருவன், சிம்சுமார சக்ரம் என்று ஆராய்ந்தால் இங்கும் ஆதாரமாயிருப்பது நாராயணனே.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚