Sri Mahavishnu Info: ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 28 ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 28
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 28

Sri Mahavishnu Info
ராமாயணம் | 6 யுத்த காண்டம் | பகுதி – 28
ராமர் லட்சுமணனிடம் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய உன்னை அனுமதிக்கிறேன். ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இரு. ராவணன் மிகவும் பராக்கிரமம் நிறைந்தவன். பல யுத்தங்கள் செய்து மூன்று உலகங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றான். மிகவும் வலிமையானவன். உன்னால் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற முடியும் அதற்கான வல்லமை உன்னிடம் உள்ளது. ராவணனுடைய யுத்த கலையில் என்ன குறைகள் இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் யுத்தம் செய். ராவணனுடைய மந்திர அஸ்திரங்களை நன்றாக கவனித்து அதற்கு ஏற்றார் போல் உன்னுடைய அஸ்திரங்களை உபயோகித்து உன்னை காத்துக் கொள். ஆனால் எந்த நேரமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் ராவணன் தோல்வியை சந்திக்கும் இறுதி நேரத்தில் மாயங்களால் வஞ்சகம் செய்து ஏமாற்றி வெற்றி பெற நினைப்பான். சென்று வா என்று அனுமதி அளித்தார். ராமரின் பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன் ராவணனை நோக்கி விரைவாக சென்றான்.

ராமரை எதிர்த்து ராவணன் யுத்த களத்திற்கு வந்திருக்கிறான் என்ற செய்தி அறிந்த முனிவர்களும் தேவர்களும் கந்தர்வர்களும் இந்த யுத்தத்தைப் பார்க்க ஆவலுடன் வந்திருந்தார்கள். லட்சுமணன் ராவணனை சுற்றி இருக்கும் ராட்சச படைவீரர்களை சமாளித்துக் கொண்டு ராவணனை நோக்கிச் சென்றான். ராவணனை சுற்றி பல அடுக்குகளாக பாதுகாப்பாக சுற்றி நின்ற ராட்சச படை வீரர்கள் லட்சுமணனை ராவணனின் அருகில் செல்ல விடாமல் தடுத்து யுத்தம் செய்தார்கள். அதற்குள் ராவணனின் முன்பு தாவி வந்து சேர்ந்த அனுமன் அவனை எதிர்த்து நின்று பேச ஆரம்பித்தார். தேவர்கள் தானவர்கள் கந்தர்வர்கள் யட்சர்கள் ராட்சசர்களால் உனக்கு மரணமில்லை என்று பல வரங்களை வாங்கியிருக்கிறாய். ஆனால் வானரங்களினால் மரணம் இல்லை என்ற வரத்தை நீ வாங்கவில்லை. எனவேதான் நீ வானரங்களை பார்த்தால் பயப்படுகிறாய் உன்னால் முடிந்தால் என்னுடன் யுத்தம் செய் என்று சத்தமாகச் சொன்னார். அதற்கு ராவணன் அனுமனிடம் உன்னால் முடிந்தால் தைரியமாக என்னைத் தாக்கு. உன்னுடைய வலிமையைப் பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார் போல் உன்னிடம் சண்டையிட நினைக்கிறேன் என்றான். அதற்கு அனுமன் இதற்கு முன்பாக தனியாக நான் அசோகவனம் வந்த போது பெரும் படையுடன் வந்த உனது மகனையே கொன்றிருக்கிறேன் இதிலிருந்தே எனது வலிமையை நீ தெரிந்து கொள்ள வில்லையா? இப்போது உன்னிடமும் எனது வலிமையை காட்டுகிறேன் பார் என்று ராவணனின் அருகில் தாவிச் சென்ற அனுமன் தனது கைகளால் ராவணனின் மார்பில் குத்தினார். அனுமனின் திடீர் தாக்குதலில் நிலை குலைந்து போன ராவணன் சிறிது நேரம் ஆடிப்போய் தனது ரதத்திலேயே அமர்ந்தான். இதனைக் கண்ட முனிவர்கள் தேவர்கள் கந்தர்வர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தார்கள்.

ராமர் அனுமனின் செயலைக் கண்டு ஆச்சரியமடைந்தார். ராவணன் சிறிது நேரத்தில் சுயநிலையை பெற்று அனுமனிடம் பேச ஆரம்பித்தான். வானரனே இது நாள் வரை என்னை எதிர்த்து நின்று தாக்கிய வீரன் யாருமில்லை. எதிரியாக இருந்தாலும் உன்னுடைய வீரத்தை நான் பாராட்டுகின்றேன் என்றான். அதற்கு அனுமன் என் வலிமை முழுவதையும் பயன்படுத்தி உன்னை அடித்திருக்கிறேன். ஆனாலும் நீ உயிரோடு இருக்கிறாய். என்னுடைய வலிமை அவ்வளவு தான் நீ பாராட்டும் அளவிற்கு வலிமையானவன் நான் இல்லை. எனது ராமர் உன்னை அடித்திருந்தால் அந்நேரமே நீ இறந்திருப்பாய் என்றார். ராமரின் பெயரைக் கேட்டதும் கோபம் கொண்ட ராவணன் தனது வலிமை முழுவதையும் பயன்படுத்தி அனுமனின் மார்பில் குத்தினான். இதில் அனுமன் கலங்கி நிற்கும் போது ராவணன் இரண்டாவது முறையாக குத்தினான். அனுமன் நிலை குலைந்து தடுமாறி நின்றார். அந்நேரம் பிரஹஸ்தனைக் கொன்ற நீலனை பார்த்த ராவணன் அனுமனை விட்டு நீலனை தாக்க சென்றான்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚