திருப்பாணாழ்வார் வாழ்க்கை வரலாறு

பிறந்த ஊர்: உறையூர் (திருச்சி)
பிறந்த காலம்: எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு, கார்த்திகை மாதம்
நட்சத்திரம்: ரோகிணி (வளர்பிறை துவிதியை)
கிழமை: புதன்
எழுதிய நூல்: அமலனாதிபிரான்
பாடிய பாடல்கள்: 10
சிறப்பு: திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்
இவர் தினமும் கையில் வீணையேந்தி காவிரியாற்றின் தென்கரைக்கு சென்று அங்கிருந்தபடியே ஸ்ரீரங்கப்பெருமாளை நோக்கி பாடுவார். ஒருமுறை, பெருமாளை பாடிக்கொண்டிருக்கும் போது சாரங்கமுனி என்பவர் நீராட்ட பொற்குடம் எடுத்து செல்வதற்காக திருப்பாணரை விலகச் சொன்னார். ஆனால் பக்தியில் தோய்ந்த திருப்பாணாழ்வார் அதை கவனிக்கவில்லை. கோபமுற்ற சாரங்கமுனி அவரை கல்லால் எறிந்து காயப்படுத்தினார்.
அபிஷேகத்தின் போது பெருமாளின் தலையில் ரத்தம் தெரிந்ததால் சாரங்கமுனி பதறினார். கனவில் பெருமாள் தோன்றி, “நீ தாக்கியது என்னைத் தான்” என்று தெரிவித்தார். மன்னிப்புக் கேட்டுப் பெருமாளின் கட்டளைப்படி, திருப்பாணரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.
திருப்பாணாழ்வார் பெருமாளின் திருவடிகளை முதல் தலை வரையிலும் பார்த்து மகிழ்ந்து, கீழ்கண்ட பாசுரத்தில்:
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்கென் அமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே
என்ற பாடலுடன் எல்லா பத்துப் பாடல்களையும் பாடி முடித்த பிறகு பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தன் பரமபதத்தை அடைந்தார். திருப்பாணாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யவில்லை; ஆனால், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து மூன்று திவ்யதேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார்.