Sri Mahavishnu Info: சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் | Soodikodutha Sudarkodi Andal – Sacred Garland Offering சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் | Soodikodutha Sudarkodi Andal – Sacred Garland Offering
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் | Soodikodutha Sudarkodi Andal – Sacred Garland Offering

Sri Mahavishnu Info

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த நந்தவனத்தில், அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு தொற்றிக் கொண்டது. திடீரென்று அங்கிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்தான் அதற்கு காரணம்.

அந்த நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட உடன், அந்த அழுகுரல் வந்த திசை நோக்கிச் சென்றார்.

அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது, அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக் கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்த அவர், அந்தக் குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.

இறைவனே தனக்கு அந்தக் குழந்தையை அளித்ததாகக் கருதி ஆனந்தக் கூத்தாடினார். அந்தக் குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டு, தன் குழந்தையாகப் பாசத்தை கொட்டி வளர்த்தார்.

அந்தக் குழந்தை வேறு யாருமல்ல — சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள்தான்!

ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில், ஆண்டாள் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட நாள்தான் ஆடிப்பூரம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.

சிறு குழந்தையான ஆண்டாளுக்குத் தினமும் கண்ணனின் கதைகளை சுவைபடக் கூறுவார் பெரியாழ்வார். அதைக் கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.

பெருமாளுக்குத் தன் தந்தை தினமும் அணிவிக்கத் தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்குத் தெரியாமல் தானே சூடிக்கொண்டு தன் அழகைப் பார்த்து ரசிப்பாள்.

அருகே உள்ள கிணற்றைக் கண்ணாடியாக நினைத்து, அதில் தன் முகத்தைப் பார்த்து மகிழ்வாள். பின்னர் மாலையைக் கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள்.

ஒருநாள், அந்த மாலையில் ஆண்டாளின் தலைமுடி சிக்கியிருப்பதை பெரியாழ்வார் கவனித்தார். அதனால், அந்த மாலையைப் பெருமாளுக்குச் சாற்றாமல், வேறு ஒரு மாலையை அணிவித்தார்.

ஆனால் அன்றிரவே பெருமாள் கனவில் தோன்றி, “அவள் சூடிக் களைந்த மாலையே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு அணிவிக்க வேண்டும்.” என்று அருளினார்.

இதனால் ஆண்டாளுக்கு “சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்” என்ற திருநாமம் ஏற்பட்டது.

அன்று முதல் இன்று வரை, ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு “பூமாலை” என்று பொருள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி — என பல சிறப்பு பெயர்களால் ஆண்டாள் போற்றப்படுகிறார்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚