Sri Mahavishnu Info: கலியுக தர்மம் – எப்போது நாமம் சொல்வது? | Kali Yuga Dharma – When to Chant the Divine Name? கலியுக தர்மம் – எப்போது நாமம் சொல்வது? | Kali Yuga Dharma – When to Chant the Divine Name?
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

கலியுக தர்மம் – எப்போது நாமம் சொல்வது? | Kali Yuga Dharma – When to Chant the Divine Name?

Sri Mahavishnu Info
கலியுக தர்மம் – எப்போது நாமம் சொல்வது? | Kali Yuga Dharma – When to Chant the Divine Name?
கலியுகத்தில் பகவான் நாமம் கூற எப்போது வேண்டும்?

நியமங்களே இல்லை. எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.
நாமம் சொல்ல தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.
"நேரமில்லை" என்று சாக்குப் போக்கு சொல்லவே முடியாது.

அதெப்படி? புரந்தரதாசர் சொல்கிறார்:

 "நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக கிருஷ்ணா என பாரதே"

புரந்தரதாசர் நம்மை அழைக்கிறார்.
"பாரதே" – பாரத தேசத்தில் பிறந்த உன்னைக் கூப்பிடுகிறேன்.

அப்படிச் சொன்னால் பிற தேசத்தவர் நாமம் சொல்ல முடியாதா?
அவர்களுக்கும் சொல்லலாம்.
கண்ணெதிரில் இருப்பவரை அழைப்பதுபோல் நம்மை அவர் நேரில் அழைக்கிறார்.

மனிதப் பிறவி – அரிதில் அரிது.
அந்த அரிய பிறவி பெற்றுவிட்டாயல்லவா?
அதில் பேசும் நாக்கும் உனக்கு இருக்கிறதே!
"ஒருமுறை கிருஷ்ணா என்று சொல்லலாமே" என்று இறைவன் கெஞ்சுகிறார்.

எதற்காக சொல்ல வேண்டும்?

"கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவ பரிஹார"
"கிருஷ்ணா என பாரதே"

உனக்குத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றன அல்லவா?
ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒரு பரிகாரம் தேடி அலைய வேண்டியதில்லை.
"நீ அலைய வேண்டாம், கிருஷ்ணா என்று சொல்லிப்பார்.
அதுவே பரிகாரம்" என்கிறார் புரந்தரதாசர்.

எப்போது சொல்ல வேண்டும்?

"மலகித்து மைமுரி தேளுத்தலொம்மே கிருஷ்ணா என பாரதே"

கண்கள் விழிக்கும்போதே சொல்லலாம்.
படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கூட சொல்லலாம்.

 "ஸூளி தாடுத மனே யொளகா தருவொம்மே கிருஷ்ணா என பாரதே"

அறையிலிருந்து அறைக்கு நடக்கும்போது கூட சொல்லலாம்.

"ஸ்நான பான ஜப தபகள மாடுதே கிருஷ்ணா என பாரதே"

குளிக்கும்போது, தண்ணீர் குடிக்கும்போது, ஜபம் செய்யும்போது, தியானிக்கும்போது – எப்போதும் கிருஷ்ணா என்று சொல்லலாம்.
உன்னால் பெரிய ஸ்லோகங்கள் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை.
"கிருஷ்ணா" என்று சொன்னால் போதும்.

"ஷால்யான்ன ஷட்ரச திந்து த்ருப்தவனாகி கிருஷ்ணா என பாரதே"

சாப்பிடும் முன் சொன்னால் நல்லது.
சாப்பிட்ட பிறகும் திருப்தி அடைந்தபோது சொன்னாலும் நல்லது.
அப்போது உணவில் இருக்கும் தோஷம் நீங்கும்.

"கந்தவ பூசி தாம்பூலவ மெலுவாக கிருஷ்ணா என பாரதே"

பரிமளங்களை பூசும்போதும், தாம்பூலம் மெல்லும்போதும் சொல்லலாம்.

"செந்துள்ள ஹாஸிகெயொளு குளிதொம்மெ கிருஷ்ணா என பாரதே"

சுகமான மெத்தையில் அமர்ந்திருக்கும் போது கூட சொல்லலாம்.

 "கந்தன்ன பிகிபிகி தப்பி முத்தாடுத கிருஷ்ணா என பாரதே"

உன் குழந்தையை கொஞ்சும்போது, முத்தமிடும்போது கூட கிருஷ்ணா என்று சொல்லலாம்.

"மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே கிருஷ்ணா என பாரதே"

உன் மனைவியுடன் இனிமையான நேரத்தில் கூட "கிருஷ்ணா" என்று சொல்லலாம்.
அவனை விட சிருங்கார ரஸத்தில் சிறந்தவர் யார்?

 "பரிஹாஸ்யத மாதலாடுத லொம்மே கிருஷ்ணா என பாரதே"

கேலி பேசும்போதும், கலகலப்புடன் உரையாடும்போதும் கூட "கிருஷ்ணா" என்று சொல்லலாம்.
அவன் மகிழ்ச்சி அடைவான்.

 "பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து கிருஷ்ணா என பாரதே"

சாதாரண பேச்சுக்களில் கூட இடையே "கிருஷ்ணா" என்று சொல்லி பழகலாம்.

 "துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ கிருஷ்ணா என பாரதே"

நம்மைப் பீடிக்கும் கெட்ட கிரஹங்கள் விலகி,
கிருஷ்ணனின் அனுக்ரஹம் நம்மைத் தழுவட்டும் என்பதற்காக கிருஷ்ணா என்று சொல்லலாம்.

"கருடகமன நம்ம புரந்தர விட்டலன கிருஷ்ணா என பாரதே"

கருடமீது சாம்பாவாக வருவான் கிருஷ்ணன்.
அவனுடைய பெயரை எப்போதும் சொல்லி பழக்கெடுக்க வேண்டும் என்று புரந்தரதாசர் அழைக்கிறார்.

🔔 புரந்தரதாசர் எளிய முறையில் நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்:

கால எல்லை இல்லை, இட எல்லை இல்லை, சூழ்நிலை எல்லை இல்லை.
"கிருஷ்ணா" என்று சொல்லவேண்டிய நேரம் எப்போது என்று சொல்லவே முடியாது. எப்போதும், எங்கும் சொல்லலாம்.

நம்மைக் கரையேற்றுவதில், மஹான்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை?

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚