
பெரிய திருமலை நம்பி வைபவம்
திருநக்ஷத்திரம் : வைகாசி ஸ்வாதி
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய
ப்ராசேதஸாதேஸபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தமதேஸிகாய
ஸ்ரீஸைலபூர்ணாய நமோ நமஸ்தாத் ||
திருநக்ஷத்திரத் தனியன் :
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம் |
ஸ்ரீஸைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜாத மாஸ்ரயே ||
வாழித்திருநாமம் :
வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யனிராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்கதிருமலையார்க் கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்பறிந்தோன் வாழியே
திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே.
பெரியதிருமலைநம்பி திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
