
(பெரியாழ்வார் வைபவத்திலிருந்து தொகுக்கப்பட்டவை)
செல்வநம்பி வாழித்திருநாமம்
அன்னவயல் கோட்டிநகர்க்கதிபதியோன் வாழியே
ஆவணிசேர் பூசத்தில் அவதரித்தான் வாழியே
வண்ணமலராள்கோனாய் வந்துதித்தான் வாழியே
மறையவர்கோன் பட்டர்பிரான் வாழ்த்துமவன் வாழியே
பன்னுபல நற்கலைகள் பயிலுமவன் வாழியே
பண்புடனே கோட்டிநம்பி பணியுமவன் வாழியே
தென்னவனுக்காரியனாய்த் தேர்ந்துரைப்போன் வாழியே
செல்வநம்பி திருவடிகள் சகதலத்தில் வாழியே
செல்வநம்பி திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
