Sri Mahavishnu Info: மகாபாரதம் | 18 சுவர்க்க ஆரோஹன பருவம் | பகுதி -2 மகாபாரதம் | 18 சுவர்க்க ஆரோஹன பருவம் | பகுதி -2
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

மகாபாரதம் | 18 சுவர்க்க ஆரோஹன பருவம் | பகுதி -2

Sri Mahavishnu Info

மகாபாரதம் 18 | சுவர்க்க ஆரோஹன பருவம் | பகுதி -2
யுதிஷ்டிரன் தன் போக்கில் பேச்சை முடித்தவுடன் தர்மராஜன் யுதிஷ்டிரன் முன்னிலையில் தோன்றினார். யுதிஷ்டிரனுடைய தெய்விக தந்தையாகிய தர்மராஜார் வேண்டுமென்றே மூன்றாவது தடவையாக யுதிஷ்டிரனை பரிசோதனை செய்திருந்தார். அதிலும் யுதிஷ்டிரன் வெற்றி பெற்றான். தர்மராஜன் தோன்றியதும் அங்கு இருந்த காட்சி திடீரென்று மறைந்து நரகம் சொர்க்கமாக மாறியது. இது யுதிஷ்டிரனுக்காக வேண்டுமென்றே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வெறும் தோற்றம் ஆகும் தர்ம மார்க்கத்தில் இருந்து இம்மியளவும் பிசகாது இருந்த யுதிஷ்டிரனுக்கு இந்த கொடிய காட்சியானது சிறிது நேரத்திற்கு வேண்டுமென்றே காண்பிக்கப்பட்டது. நரக வேதனை என்ன என்பதை அறியாது இருந்தால் யுதிஷ்டிரன் வாழ்க்கையை பற்றிய அனுபவங்கள் பூர்த்தியடையாது. தான் வேண்டுமென்று செய்யாமலேயே துரோணருக்கு போர்க்களத்தில் சிறிது குழப்பத்தை உண்டு பண்ணி துரோணர் இறப்பதற்கு யுதிஷ்டிரனும் ஒரு காரணமாக இருந்தான். அறியாமல் செய்த குற்றத்திற்கு சிறிது நேரம் நரகத்தில் இருக்க வேண்டும் என்ற சிறு தண்டனை அவனுக்கு அளிக்கப்பட்டது.

ஒருவன் எவ்வளவு தான் தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தாலும் அவர்கள் சிறிதேனும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். இந்த வகையில் பீஷ்மர் கர்ணன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் திரௌபதி யுதிஷ்டிரனும் சிறிது நேரம் தண்டனையை அனுபவித்தார்கள். சிறிது நேர நரக தண்டனை முடிந்ததும் இப்போது அவர்கள் இருந்த இடம் சொர்க்கமாக மாறி பேரின்பத்தில் வாழ்வார்கள். ஒருவன் எவ்வளவு தவறு செய்தாலும் அவன் சிறிது நன்மை செய்திருப்பான் அதன்படி துரியோதனன் செய்த சிறிது நன்மைக்காக சிறிது நேரம் சொர்கத்தில் வாழ்ந்தான். செய்த நன்மைக்கான பலன் சொர்க்கத்தில் முடிவடைந்ததும் அவன் இருந்த இடம் நரகமாக மாறியது. இப்போது அவன் செய்த தவறுக்கு நரகத்தில் அதற்கான தண்டனை அனுபவிப்பான்.

மண்ணுலகில் தர்மத்தை கடைபிடித்து தர்மன் என்று பெயர் பெற்ற யுதிஷ்டிரன் விண்ணகத்திலும் தர்மத்தை கடைபிடித்து தர்மராஜன் பெற்ற மகனாக விளங்கினார். யுதிஷ்டிரன் கடைபிடித்து வந்த தர்மத்தை சொர்க்கபதவியை காட்டியும் நரக வேதனை காட்டியும் அவனை கடைபிடிக்காமல் செய்ய இயலவில்லை. அனைத்து சோதனைகளிலும் அவன் வெற்றி பெற்று விண்ணுலகிலும் தர்மன் என்னும் பெயர் பெற்றான்.

யுதிஷ்டிரன் தேவலோகத்தில் இருந்த கங்கா நதியில் நீராடினான் அதன் விளைவாகத் விண்ணுலகிற்கு உரியவனான். அதன் பிறகு அவன் தனது சகோதரர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் உடன் பிறந்தவர்கள் திரௌபதியும் ஏற்கனவே விண்ணுலக வாசிகளான அவர்களோடு சேர்ந்த அவனது பேரானந்தம் பன்மடங்கு அதிகரித்தது. நெடுநாள் சொர்க்க பதவியை அனுபவித்தை பிறகு சிலர் பரம்பொருளில் இரண்டறக் கலந்தனர். வேறு சிலர் தங்கள் புண்ணிய கர்மாக்களை முடித்துக் கொள்ளுதல் பொருட்டு மீண்டும் மண்ணுலகில் பிறந்தனர்.

மகாபாரதம் முற்றியது.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚